Saturday, May 21, 2011

VijaY Next....!

'வேலாயுதம்'' படத்தை அடுத்து விஜய் என்ன படத்தில் நடிக்கிறார் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், விஜய் கால்ஷீட் கொடுத்த 'பொன்னியின் செல்வன்' டிராப் ஆனது.

'பொன்னியின் செல்வன்' கால்ஷீட்டை சீமான் தனது 'பகலவன்' படத்திற்கு உபயோகப்படுத்தி கொள்வார் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அமீர் இயக்கத்தில் 'கண்ணபிரான்' என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். அமீருடன் விஜய்க்கு இருக்கும் நட்பு எந்த அளவில் என்று விசாரித்தால் பல்வேறு புது தகவல்கள் கிடைத்தன.

அமீர் விஜய்யை மனதில் வைத்து தயார் செய்த கதை தான் 'பருத்தி வீரன்'. ஆனால் சிவகுமார் தனது இளைய மகன் கார்த்தியை அமீரிடம் ஒப்படைத்து " இவனை படத்தில் நீ தான் அறிமுகப்படுத்த வேண்டும் " என்று கூறவே கார்த்தி நடித்த படமாக 'பருத்தி வீரன்' வெளிவந்தது.

'பருத்தி வீரன்' வெளியான சமயத்தில் படத்தை பார்த்த விஜய் அமீருக்கு போன் செய்து " உங்கள் படத்தை பார்த்து நான் அழுது விட்டேன் " என்று கூறி இருக்கிறார். அது வரை ரகசியம் காத்த அமீர் " இந்த கதையே உங்களை மனதில் வைத்து தான் தயார் செய்தேன்" என்று கூறி, அதன் பின் நடந்தவற்றையும் விளக்கி இருக்கிறார்.

நாம் இருவரும் இணைந்து கண்டிப்பாக படம் பண்ண வேண்டும் என்று உறுதி அளித்து இருக்கிறார் விஜய். இப்போது 'கண்ணபிரான்' படத்தில் விஜய் தான் நாயகன் என்று உறுதிபட தெரிவித்து விட்டாராம் அமீர்.

ஜெயம் ரவி நடிக்க 'ஆதிபகவன்' படத்தை இயக்கி வரும் அமீர் அடுத்ததாக விஜய் வைத்து 'கண்ணபிரான்' படத்தை இயக்குவார் என்று அமீரின் நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...