Friday, April 29, 2011

விஜய் பிறந்த நாளில் வேலாயுதம்

"காவலன்" படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது "வேலாயுதம், நண்பன்" போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஜய்.
"வேலாயுதம்" படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இதில் விஜய்யுடன் ஹன்சிகா மோட்பானி, ஜெனிலியா நடிக்கின்றனர்.
ஜுன் 22 ந் திகதி வேலாயுதம் படத்தை வெளியிட்டு விட வேண்டும் என்று வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஏனென்றால் அன்றுதான் விஜய்யின் பிறந்த நாள்.
அதனால்தான் இத்தனை வேகம் காட்டப்படுகிறது என்று கூறப்பட்டாலும் உண்மை அதுவல்லவாம். விஜய் பிறந்த நாளாக இருந்தால் அன்று மட்டும் அனுமதிச் சீட்டின் விலையை ஐந்து மடங்காக உயர்த்தி வாங்க போகிறார்கள் ரசிகர்கள். எனவே ஆஸ்கர் ரவியின் வேகம் வட்டிக்கணக்கு பார்ப்பதால்தானாம்.
இப்படத்தை ராஜா இயக்குகிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். விஜய் பால்காரர் வேடத்தில் வருகிறார். ஜெனிலியா நிருபராக வருகிறார். விஜய்யை வைத்து ராஜா இயக்கும் முதல் படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற வெற்றி படங்களை ராஜா இயக்கியுள்ளார்.
இந்த படத்தை எவ்வளவு விரைவாக முடிக்கிறாரோ, அவ்வளவு வட்டி குறையும் என்பது அடிப்படையில் பைனான்சியரான அவர் கணக்கு. தனது படத்தில் நடித்து முடித்துவிட்டு நண்பன் படத்தை ஒப்புக் கொண்டிருக்கலாம். அப்படி ஒப்புக் கொண்டாலும் தவறில்லை.
அவ்வப்போது வேலாயுதம் படப்பிடிப்பை விட்டு விட்டு நண்பன் படத்திற்காக அந்தமானுக்கு பறந்து போய் விடுகிறாரே என்றும் கவலைப்படுகிறாராம் தயாரிப்பாளர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...